தென்தாமரைகுளம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது

3581பார்த்தது
தென்தாமரைகுளம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது
தென்தாமரைக் குளம் அருகே காமராஜர் புரத்தை சேர்ந்தவர் தனுஷ் கிருஷ்ணன் (20) அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை பார்க்க சேதுபதியூரை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் அடிக்கடி வருவார். இதை தனுஷ் கிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் சம்பவத்தன்று சாமிதோப்பு ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் தனுஷ் கிருஷ்ணன் வந்திருந்த போது, அங்கு வந்த ஆனந்தராஜ் மற்றும் நைனா புதுரை சேர்ந்த அசோக் குமார், கோவிந்தராஜ் ஆகியோர் அவரை அறிவாளால் சரமரியாக வெட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த தனுஷ் கிருஷ்ணன் சுசீந்திரம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஈத்தங்காடு சந்திப்பில்  வைத்து பைக்கில் வந்த ஆனந்தராஜ், அசோக் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும்  பைக் மற்றும் அரிவாளம் பர்முதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை நாகர்கோவில் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கோவிந்தராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி