தமிழ்நாட்டில் இன்று (பிப்.,22) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் நாளை (பிப்.,23) மற்றும் நாளை மறுநாள் (பிப்.,24) தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.