இளம்பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்கு.

83பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் மேல மணக்குடி குருசடி தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 27). இவருடைய மனைவி சகாய ரசிமா (22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இருவருக்குமான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சகாய ரசிமா நாகர்கோவில் செட்டிகுளம் வந்தார். அப்போது அங்கு வந்த ஜார்ஜ் திடீரென சகாய ரசிமாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது பற்றி கோட்டார் போலீஸ் நிலையத்தில் சகாய ரசிமா புகார் அளித்தார். அதன்பேரில் ஜார்ஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி