கருங்கல் அருகே கஞ்சாவுடன் 2 பேர் கைது

50பார்த்தது
கருங்கல் அருகே கஞ்சாவுடன் 2 பேர் கைது
கருங்கல் போலீஸப் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன் தலைமையிலான போலீசார் முள்ளங்கினாவிளை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னான முரணான தகவலை தெரிவித்தனர்.

      போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை கருங்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, அவர்கள் கருங்கல் பகுதியை சேர்ந்த எபின் ராஜ் (23), திப்பிரமலையை சேர்ந்த அபினேஷ் (18) என்பது தெரிய வந்தது. இருவரின் கைது செய்த போலீசார் கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கேரள மாநிலம் பீமா பள்ளியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி