நித்திரவிளையில் ஸ்கூட்டரில் கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்

79பார்த்தது
நித்திரவிளையில் ஸ்கூட்டரில் கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்
நித்திரவிளை போலீசார்  விரிவிளை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற  ஸ்கூட்டர் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அந்த ஸ்கூட்டரில் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 140 லிட்டர் மண்ணெண்ணையை 4 கேன்களில் கொண்டு ரெண்டு பேர் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.
      இதை பார்த்த போலீசார் ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் இனயம் பகுதியில் இருந்து இந்த மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதை அடுத்து மண்ணெண்ணெய் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி