ரயில்வே மேம்பால பணியை பார்வையிட்ட குமரி எம் பி

73பார்த்தது
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ஆரல்வாய் மொழி பகுதியில் உள்ள சுபாஷ் நகரில் நடை பெற்று வரும் ரயில்வே மேம்பால பணியை இன்று பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் பணியை விரைந்து முடிக்கவும் அதிகாரகளிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முருகானந்தம், வர்த்தக காங்கிரஸ் செயலாளர் ராமமூர்த்தி, கிழக்கு மாவட்ட ஐஎன்டியூசி தலைவர் டாக்டர் சிவகுமார், நீலாமணி, முகைதீன் சாகுல்ஹமீது உட்பட இரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி