குமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழக்கம்போல் இயங்கியது

83பார்த்தது
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டித்து, நாடு முழுவதும் இன்று இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்தபோராட்டம் அறிவித்துள்ளது.  

     இந்திய மருத்துவ சங்கத்தின், கன்னியா குமரி மாவட்ட கிளை சார்பிலும் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனைகளில் புற நோபாளிகள் சிகிச்சை பிரிவு இயங்க வில்லை. அவசர சிகிச்சை, முக்கிய அறுவை சிகிச்சைகள் மட்டும் நடந்தன.  

      நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று வழக்கம் போல் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயலபட்டது. அரசு டாக்டர்கள் பணிக்கு வந்திருந்தனர். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் பணிக்கு வந்து இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி