கோயில் நேர்த்தி கடனுக்கான ஆடு  திருட்டு; ஒருவர் கைது

60பார்த்தது
கோயில் நேர்த்தி கடனுக்கான ஆடு  திருட்டு; ஒருவர் கைது
கோட்டார் அருகே வடிவீஸ்வரம் பகுதி மேலகருப்பு கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் தனது குடும்ப கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கறுப்பு ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த 21ஆம் தேதி இவரது ஆட்டை திடீரென காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது, பைக்கில் வந்த இரண்டு பேர் சேர்ந்து ஆட்டை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது.  

இது தொடர்பாக மணிகண்டன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக  கோட்டார் இளங்கடைய சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளியான இஸ்மாயில் மகன் முஹம்மது நிஷாந்த் (29) என்பவரை கைது செய்து விசாரித்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். திருடு போன ஆட்டின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி