முதல்வர் விருது பெற்ற இளைஞருக்கு கலெக்டர் பாராட்டு

75பார்த்தது
முதல்வர் விருது பெற்ற இளைஞருக்கு கலெக்டர் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற்ற கேசவன்புத்தன்துறை பகுதியை சார்ந்த செல்வன். ம. ஜோஷன் ரிகோபெர்ட் என்பவரை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா  சந்தித்து வாழ்த்தி தெரிவித்ததாவது: -

அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட, கேசவன்புத்தன்துறை என்ற கிராமத்தினை சேர்ந்த செல்வன். ம. ஜோஷன் ரிகோபெர்ட் என்பவர் சமூக சேவையில் ஈடுபட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் கணவரால் கைவிட்ட பெண்களுக்கு தொழில் அமைத்து கொடுத்தல், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தரமான கழிப்பறை கட்டி கொடுத்தல், அரசு தொடக்கப்பள்ளிக்கு வர்ணம் மற்றும் சுவரோவியம் வரைதல் போன்ற பணிகளை செய்து கிராமத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார்.

 அதன்படி, 2024ம் ஆண்டிற்கான சிறந்த முறையில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த செல்வன். ம. ஜோஷன் ரிகோபெர்ட் என்பவருக்கு 15. 08. 2024 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலர் ராஜேஷ், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி