கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த இளம்பெண்

66பார்த்தது
கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த இளம்பெண்
கருங்கல் அருகே உள்ள எட்டணியை சேர்ந்தவர் தேவசகாயம் மகன் வினித் (வயது 30) இவர் சென்னையில் பிளம்பராக வேலை செய்து வந்தார். தஞ்சாவூர், தென்கரை பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகள் பிரியங்கா (28). இவர் சென்னையில் ஒரு பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அப்போது, இருவரும் காதலித்தனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இதனால், பிரியங்காவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
    இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி பிரியங்கா, வினித்துடன் சென்னையில் இருந்து எட்டணியில் உள்ள காதலன் வீட்டிற்கு வந்தார். 16-ந்தேதி இருவரும் தக்கலை குமாரகோவிலில் உள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
    இதற்கிடையே பிரியங்காவின் உறவினர்கள் அவரை தேடி கருங்கல் போலீசில் நிலையத்துக்கு வந்தனர். இதை அறிந்த பிரியங்காவும் வினித்தும் கருங்கல் போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் இவரின் பெற் றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும், போலீசாரிடம் பிரியங்கா தான் காதலித்துதிருமணம் செய்துகொண்ட வினித்துடன் தான் செல்வேன் என உறுதியாக கூறினார். அதற்கு பிரியங்காவின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். காதலர்கள் இருவரையும் போலீசார் சேர்த்து வைத்து அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி