மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் - அதிமுக வேட்பாளர் பேட்டி

1932பார்த்தது
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் இன்று (26-ம் தேதி) நாகர்கோவிலில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -        புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜாதி மத பாகுபாடின்றி ஆட்சி நடத்தினார். ஆனால் மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசு தற்போது ஊழலில் திளைத்து வருகிறது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுக -விற்கு தோல்வி தொடங்கிவிடும்.    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் மீனவர்கள் மற்றும்  கிறிஸ்தவர்களின் வாக்குகளை பெற்றுவிட்டு தமிழக முதலமைச்சர் அவர்களை ஏமாற்றி வருகிறார்.       தற்பொழுது உள்ள விஜய்வசந்ந்எம். பி. கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றவில்லை.   திமுக அரசும் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் உள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் கனிமவள  பிரச்சனையில் பொதுமக்களுடன் இணைந்து போராட தயாரா?   ஆனால் நான் மக்களுக்காக குரல் கொடுக்க தயாராக உள்ளேன். உங்களில் ஒருவராக இருந்து செயல்படுவேன். லஞ்ச ஊழல் இல்லாத எம்பி யாக செயல்படுவேன். எனவே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி