தண்ணீர் பிடிக்கும் போது கால்வாயில் கவிழ்ந்த டாங்கர் லாரி

76பார்த்தது
திருவட்டார் - குளச்சல் சாலையில், பூவன் கோடு பகுதியில் சாலை வேலை தற்போது  நடந்து வருகிறது. இன்று (16-ம் தேதி) மாலை 4 மணிக்கு சாலை வேலைக்கு தண்ணீர் எடுப்பதற்காக டாங்கர் லாரி ஒன்று  சிற்றார் - பட்டணம் கால்வாயில் ஆனையடி பாலம் அருகில் சென்றுள்ளது.  

     கால்வாயில் இருந்து தண்ணீர் எடுக்க டாங்கர் லாரியை சாலையோரம் டிரைவர் நிறுத்தியுள்ளார்.

     அப்போது  திடீரென டாங்கர் லாரி கால்வாயில் சரிந்து, டிரைவர்அதிர்ஷ்டவசமாக தப்பினார். பின்னர் கிரேன்கள் மூலம் டாங்கர் லாரியை கால்வாயில்  இருந்து மீட்கும் பணி நடந்தது.

தொடர்புடைய செய்தி