தேங்காய்பட்டணம் அருகே கடலில் விழுந்து மீனவர் உயிரிழப்பு

80பார்த்தது
தேங்காய்பட்டணம் அருகே கடலில் விழுந்து மீனவர் உயிரிழப்பு
தேங்காப்பட்டணம் அருகே இனயம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தாசன் மகன் ஆரோக்கிய நிதின் (27). இவர் தனது தம்பியான நிதிஷ் என்பவரின் பைபர் வள்ளத்தில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

      இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஆரோக்கிய நிதின் கடலில் மீன் பிடிக்க சென்றார். தேங்கா பட்டணம்   மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஐந்து நாட்டிங்கல்  மைல் தூரத்தில் வள்ளத்தில் மீன்பிடித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கடலில் விழுந்தார்.

      அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  சக மீனவர்கள் இதை பார்த்து கரையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கடலில் இறங்கி ஆரோக்கிய நிதினை தேடினர். அப்போது அவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து குளச்சல் மரைன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

      மரைன் போலீசார் நிதின் சடலத்தை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி