இரவில் காரை நடுரோட்டில் நிறுத்திய போதை ஆசாமி - பரபரப்பு

71பார்த்தது
தக்கலை அருகே அழகியமண்டபம் சந்திப்பு வழியாக நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் உள்ள சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால். வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகவே செல்ல முடியும். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கார் ஒன்று அந்த பகுதிக்கு வந்தது. அந்த காருக்குள் டிரைவர் உட்பட 4 பேர் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் காரை ஓட்டி வந்த வாலிபர் திடீரென நடுரோட்டில் காரை நிறுத்தினார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் முன்பு செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் காரை அகற்ற கூறிய போது அந்த வாலிபர் உட்பட 4 பேரும் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் காரை அகற்ற கூறியவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பொதுமக்கள் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் வருவதை அறிந்து கொண்ட போதை ஆசாமி காரை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். அதன் பிறகு தான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடிபோதையில் ரகளை ஈடுபட்ட வாலிபர் யார் என்பது தெரியவில்லை? அவரை சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி