உத்திரமேரூர் அம்மன் வீதியுலா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

59பார்த்தது
உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீ மாரிமேற்கத்தியம்மன் கோவில் திருவிழா: அம்மன் வீதியுலா.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரிமேற்கத்தியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் 12 ம் ஆண்டு திருவிழா கடந்த இருதினங்களாக நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வான அம்மன் வீதியுலா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்த அம்மனுக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து, தீவாரத்தனை காட்டி வழிபட்டனர். இந்த திருவிழாவை காண உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி