உத்திரமேரூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

72பார்த்தது
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி வழக்கறிஞர்கள் உத்தரமேரூரில் போராட்டம்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் புதிய சாட்சிய சட்டம், புதிய தண்டனை சட்டம் ஆகியவற்றை தடுத்து நிறுத்த கோரியும், புதிய சட்டங்களை திரும்ப பெற கோரியும் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது உத்துரமேரூர் வழக்கறிஞர் சங்க தலைவர் கருணாநிதி தலைமையிலும், செயலாளர் கிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் நல சங்க கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் அன்பழகன் மாநிலத் துணைச் செயலாளர் ஆதிகேசவன் செயற்குழு உறுப்பினரும் அரசு வழக்கறிஞருமான பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி