ஸ்ரீபெரும்புதுார்: பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது

71பார்த்தது
ஸ்ரீபெரும்புதுார்: பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் சிறிபெரும்புதூர் அருகே, பால்நல்லூர் கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

வல்லம் - வடகால் சிப்காட் சாலையில், பால்லூர் சந்திப்பில் உள்ள பெட்டி கடையில் போலீசார்  சோதனையில் ஈடுபட்ட போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஸ்வாகத், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 15,000 ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் கலா, 44, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி