ராமநாதபுரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக சேட் ஆயூப்கான் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அண்மையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை செய்து வந்த நிலையில் ஆயூப்கான் இன்று (பிப். 19) தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும்.