திருக்கழுக்குன்றம் அருகே காயலன் கடையில் பயங்கர தீ விபத்து

1091பார்த்தது
திருக்கழுக்குன்றம் அருகே காயலன் கடையில் பயங்கர தீ விபத்து சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் இதில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பைபாஸ் சாலையில் காயலாங்கடை அமைந்துள்ளது நேற்று (22.04.2024) இரவு சுமார் 10 மணி அளவில் கிடங்கில் திடீரென தீப்பற்றிக் கொண்டு கொளுந்து விட்டு எறிய துவங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த கிடங்கில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து தேவையற்ற கழிவு பொருட்களை எடுத்து வந்து அதனை புதுப்பித்து அவற்றிலிருந்து வேறொரு தேவையான பொருள் செய்து விற்பனை செய்வதற்கான இந்த கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள், மரபொருட்கள், அட்டைப் பெட்டிகள், இரும்பு பொருட்கள் என மொத்தம் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வைத்துள்ளதாகவும் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

இந்த தீ விபத்தானது, யாரேனும் திட்டமிட்டு செய்த சதியா அல்லது மது பிரியர்களால் ஏற்பட்டதா என திருக்கழுக்குன்றம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி