வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த பாமக வேட்பாளர்

62பார்த்தது
திருக்கழுக்குன்றம் சதுரங்கப்பட்டினம் கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் பதிவான வாக்குகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் காஞ்சிபுரம் தனி தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் திருக்கழுக்குன்றம் கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் செய்யூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்து வாக்கு சாவடி மையங்களை ஆய்வு மேற்கொண்டார் ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பதிவான வாக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததுடன் கூட்ட நெரிசலாக உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஒவ்வொருவராக சென்று வாக்களியுங்கள் என பொதுமக்களை கேட்டுக்கொண்டார் ஆய்வின் போது பாமக நிர்வாகிகள் முனுசாமி சுந்தரமூர்த்தி திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் டி என் டி தினேஷ் குகன் உள்ளிட்டோருடன் பாஜக நிர்வாகிகள் பிரதீப், ஸ்ரீதர் என பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி