தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிய ரூ.2.26 கோடி

58பார்த்தது
தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிய ரூ.2.26 கோடி
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் புஷ்பலதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில் ரூ. 2, 26, 87, 900 ரூபாய் பணம் சிக்கியது.

அந்த பணம் வங்கி ஏடிஎம் மைய இயந்திரத்தில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் எடுத்து சென்றதால் அந்த பணத்தை பறிமுதல் செய்து செங்கல்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி