ஸ்ரீ பெரும்பதூர் - Sri Perumbadhur

காஞ்சிபுரம்: சீமை கருவேல மர காடாக மாறிய பாலாற்று படுகை

காஞ்சிபுரம்: சீமை கருவேல மர காடாக மாறிய பாலாற்று படுகை

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் பாலாற்று தடுப்பணை உள்ளது. இத்தடுப்பணை அருகே துவங்கி, பழவேரி, பினாயூர், சாத்தணஞ்சேரி வரையிலான பாலாற்று படுகைகளில், 10 ஆண்டுகளுக்கு முன், அரசு அனுமதி பெற்ற மணல் குவாரிகள் செயல்பட்டன.  அப்போது, அரசு அனுமதித்த அளவை விட கூடுதலான தூரம் மற்றும் அதிக ஆழம் பள்ளம் போட்டு மணல் அள்ளப்பட்டது. இத்தகைய வீதிமீறல் மணல் குவாரிகளால், பாலாற்று படுகைகளில் மணல் இல்லாத நிலை தற்போது வரை தொடர்கிறது. இவ்வாறு மணல் பரப்பு இல்லாத பாலாற்று படுகைகளில், சில ஆண்டுகளாக சீமை கருவேல மரங்களின் வளர்ச்சி அபரீதமாக உள்ளது.  ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே வளர்ந்திருந்த இம்மரங்கள், தற்போது ஆற்றின் பல்வேறு பகுதிகளில் பரவி காணப்படுகிறது. சீமை கருவேல மரங்களால், பழையசீவரம் தடுப்பணை அடுத்த, பழவேரி பாலாற்றில் துவங்கி, பினாயூர் வரையிலான பாலாறு அடர்ந்த காடாக காட்சி அளிக்கிறது.  இதனால், பாலாற்று படுகையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பாலாற்று பாசன விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். எனவே, பழையசீவரம் தடுப்பணை முதல் பினாயூர் வரையிலான பாலாற்று படுகைகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా