திருக்கழுக்குன்றம் அருகே புதிய மின்மாற்றி திறப்பு

63பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விட்டிலாபுரம் ஊராட்சி உட்பட்ட சிட்லம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அப்பகுதியில் மின் பற்றாக்குறையால் கடந்த 15 ஆண்டுகளாக அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதும், குறைவான மின்னழுத்த மின்சாரம் மட்டுமே வந்த நிலையில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், போன்ற பொருட்கள் திடீர் திடீரென பழுதடைவதால் கடும் அவதி அடைந்து வந்தனர் இதனை அடுத்து உயர் மின் அழுத்த மின்மாற்றி வேண்டுமென எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது அப்பகுதி மக்களின் மின்சாரத் துறையை அணுகி நேரடியாக தங்கள் பகுதிக்கு உயர் மின்னழுத்த மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து தொடர் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக 5. 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 240 மெகாவாட் அடங்கிய மின்மாற்றி பொருத்தப்பட்டது புதிய மின் மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின்வாரிய துறை மாவட்ட அளவிளான உயர் அதிகாரிகள் பங்கேற்று புதிய மின்மாற்றியை (டிரான்ஸ்பார்மரை) மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.

தொடர்புடைய செய்தி