திருப்போரூர் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயிலில் மாசிமாத பெருவிழா

50பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது அர்ச்சகர்களின் சிறப்பு வழிபாடுகளுடன் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு வழிபட்டனர் தங்க கொடிமரம் அருகே முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் காலையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலையில் பல்வேறு வாகனங்களின் மீது அருள்மிகு கந்தசுவாமி பெருமான் வீதியுலா வரும் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதன்படி, 5 ஆம் தேதி தேதி புருஷாமிருகம் உற்சவம், 6ஆம் தேதி இரவு வெள்ளி மயில் வாகனம், 7 ஆம் தேதி இரவு தங்க மயில் வாகனம் மற்றும் பஞ்சமூர்த்தி உற்சவம், 9ஆம் தேதி திருத்தேர் உற்சவம், 12ஆம் தேதி பிற்பகல் சரவணபொய்கை குளத்தில் தீர்த்தவாரி மற்றும் இரவு தெப்பல் உற்சவமும் 15 ஆம் தேதி அதிகாலை திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி