திருக்கழுக்குன்றத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சி சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் மாவட்ட செயலாளர் எஸ். ஆறுமுகம் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக முதல்வராக இருந்தபோது 54 மக்கள் நலத் திட்ட சாதனைகளை உள்ளடக்கிய துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் எம்எம். தனபால் ஆகியோர் கலந்துகொண்டு கழக ஆட்சியில் நடைபெற்ற மக்கள் நலநலத் திட்ட சாதனைகள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே வழங்கி, மேட்டுத்தெரு, சன்னதித் தெரு, தேரடி வீதி,வீதி உள்ளிட்ட முக்கிய பஜார் வீதி வழியாக கழக நிர்வாகிகள், பேரவை நிர்வாகிகள், பாசறை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என 300 க்கும் மேற்பட்டோர் புடைசூழ வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வணிகர்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க ஆதரவு தாருங்கள் என கேட்டுகொண்டனர்.