குளத்தில் மிதந்த இளைஞரின் சடலம்; பரபரப்பு

1020பார்த்தது
குளத்தில் மிதந்த இளைஞரின் சடலம்; பரபரப்பு
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லம் வடகால் பகுதியில் உள்ள ஆலமரத்து குட்டையில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதப்பதாக ஒரகடம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், குளத்தில் மிதந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், ஏன் இங்கு வந்தார் என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி