மதுராந்தகம் நகராட்சி முன்னறிவிப்பின்றி கடையை பூட்டிய ஊழியர்

78பார்த்தது
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட கடைகளில் முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் பூட்டு போடுவதால் வியாபாரிகள் கடும் வேதனை


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி
24 வார்டுகளை உள்ளடக்கியது.

இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரி பாக்கி முறையாக செலுத்தி வருகின்றனர்.

அவ்கையில் சிறுகுறு வியாபாரிகளுக்கு முன்னறிவிப்பின்றி
நகராட்சி வரியை வசூலிக்க செல்லும் அதிகாரிகள் தடாலடியாக கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களை வெளியேற்றி கடைகளுக்கு பூட்டு போட்டு செல்கின்றனர்.

இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் , குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தராததால் வரியை செலுத்த அவகாசம் கொடுக்காமல் செயல்படுகின்றனர்.

ஆகவே, மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகத்தினர்
உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறுகுறு வியாபாரிகள் கோரிக்கை விடுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி