மமக சார்பில் போதைக்கு எதிரான இருசக்கர வாகன பேரணி

56பார்த்தது
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட தென்சென்னை கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிரான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று (அக். 1) மாலை நடைபெற்றது.

மமக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜவாகத் அலி தலைமையில், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மமக மாநில அமைப்பு செயலாளர் புழல் ஷேக் முகமது அலி ஆகியோர் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணி ECR அக்கரை சந்திப்பில் தொடங்கி உத்தண்டி டோல்கேட் வரை சென்று பனையூர் நான்கு முனை சந்திப்பில் நிறைவு பெற்றது. பேரணியில் மமக இளைஞர் அணி நிர்வாகிகள் அனஸ் முகமது, அப்துல் கரீம், முகமது இம்ரான், மாவட்ட நிர்வாகிகள் முகமது யூசுப், அஸ்மத் பாஷா, பிர்தவுஸ், அன்சாரி, அப்துல் சேட், ரபீக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி