செய்யூர் தொகுதியில் விஜயகாந்த் 72 வது பிறந்த நாள் விழா

63பார்த்தது
தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாள் விழா.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த எல்லையம்மன் கோவில் பேருந்து நிலையம் அருகே தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. எல்லையம்மன் கோவில் பகுதியில் இடைக்கழிநாடு பேரூர் கழக செயலாளர் வேலு தலைமையில் கேப்டன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அதன் பின்னர் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான அனகை முருகேசன் கலந்து கொண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு நாளாக தமிழக அரசு கொண்டாட வேண்டும் என்ன கேட்டுக்கொண்டார். அதன் பிறகு கடப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட எல்லை அம்மன் கோயில் சுற்றுப்பகுதிகளில் கழக கொடியை ஏற்றி வைத்து கூடியிருந்த பொது மக்கள் மற்றும் கடப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற சிறப்பு பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை பிரியாணி வழங்கினர்.

தொடர்புடைய செய்தி