காஞ்சியில் தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி

79பார்த்தது
காஞ்சியில் தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார், மாங்காடு நகராட்சிகளில் சேகரமாகும் குப்பை, லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் கிராமத்தில் கொட்டப்படுகிறது. குப்பை ஏற்றிச் செல்லும் லாரிகள், குன்றத்துார் -- ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் வழியாக ஆப்பூர் செல்கின்றன. லாரியில் குப்பையை ஏற்றிச் செல்லும் போது, அவை காற்றில் பறக்காமல் இருக்க, தார்ப்பாய் அல்லது துணிவலை வாயிலாக லாரியினை முழுமையாக மூட வேண்டும். இதை பின்பற்றாமல், அதிகமாக குப்பையை ஏற்றிக் கொண்டு, வேகமாக செல்லும் லாரிகளில் இருந்து, குப்பை காற்றில் பறந்து சாலையில் விழுகிறது. மேலும், நோய்த் தொற்று பரவும் சூழல் நிலவுகிறது. எனவே, குப்பையை, தார்ப்பாய் வாயிலாக முழுமையாக மூடி எடுத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி