நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் வளர்மதி திறந்து வைத்தார்

60பார்த்தது
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைத்திட அதிமுக நிர்வாகிகளுக்கு
கழக பொதுசெயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார் அதன் பேரில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திருக்கழுக்குன்றம் எம். ஜி. ஆர் சிலையருகே  பொதுமக்கள் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான பா வளர்மதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இளநீர், கூழ், மோர் பனநுங்கு தர்பூசணி, உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும், இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் வழங்கினார் நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ராஜசேகர் மாவட்ட அவைத் தலைவர் தனபால், மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம்
ஒன்றிய செயலாளர்கள் ரைஸ்மில் செல்வம், பேரூராட்சி செயலாளர் தினேஷ் குமார்,  
மாவட்ட எம். ஜிஆர் மன்ற செயலாளர் வேலாயுதம், மாவட்ட எம். ஜி. ஆர் மன்ற இணை செயலாளர் ஜி. கே. பாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ் அலி உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி