செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டிய அரசு ஓட்டுநர்

1005பார்த்தது
சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை சென்ற அரசு பேருந்தில் ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கிய காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆகையால், சாலை விதிகளை மதித்து கவனமாக சாலையில் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பல விழிப்புணர்வுகளையும், உத்தரவுகளையும் போட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி தினசரி எண்ணிலடங்கா விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது

இந்த நிலையில் சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற TN 68 N 0714 அரசு பேருந்தில் ஓட்டுநர் நீண்ட தூரமாக செல்போன் பேசியபடியே வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த காட்சியை பேருந்தில் பயணம் செய்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார் அந்த காட்சி தற்போது பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

30க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணம் செய்து வருகின்ற நிலையில், இவ்வாறு செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மீது அரசு போக்குவரத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி