கொளுத்தும் வெயிலிலும் பாசத்துடன் செல்லப்பிராணிக்கு வைத்தியம்

54பார்த்தது
கோடை கொளுத்தும் வெயிலிலும் அடிபட்ட தனது செல்லப்பிராணிக்கு பாசத்துடன் வைத்தியம் பார்க அட்டைபெட்டி கட்டி சைக்கிளில் ஏற்றி சென்ற நபரைக் கண்டு பொதுமக்கள் நெகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே
எல். எண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால். இவர் மளிகை பெட்டிக்கடை வைத்து நடத்துகிறார்.

இவர் வீட்டு செல்லப்பிராணியாக 3 நாய்களை வளர்த்து வருகிறார்.

இந்த நாய்களை குழந்தைகளை போல் வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வரும் செல்லப்பிராணியான நாய்களில் ஒரு நாய்க்கு சாலை விபத்தில் அடிப்பட்டு நடக்க இயலாத நிலை ஏற்பட்டது. இந்த நாய்க்கு அடி பட்ட உடன் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர் ஜெயபால் மற்றும் அவரது குடும்பத்தினர்.

அதனைத் தொடர்ந்து, அந்த நாய்க்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு சைக்கிளில் பெட்டி கட்டி அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்து மீண்டும் அழைத்து வந்து வீட்டில் குழந்தையை போல் பராமரித்து வந்தார். இந்த செயல் அந்தப் பகுதியில் இருப்பவர்களை மிகவும் மனம் நெகிழ்ச்சி கொள்ள செய்தது.

தொடர்புடைய செய்தி