தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி, வரும் மே 6 மற்றும் 10ஆம் தேதிகளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் பணிகள் காரணமாக தேர்வு முடிவுகள் தாமதமாகலாம் என தகவல் பரவியிருந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதே போல் வரும் ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.