அச்சரப்பாக்கம்: மழை மலை மாதா திருத்தலத்தின் தேர் திருவிழா

52பார்த்தது
மதுராந்தகம் அருகே அச்சரப்பாக்கத்தில் அமைந்துள்ள மழை மலை மாதா 56ம்ஆண்டு தேர் திருவிழா தேரோட்டம் பவனி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில்.
அமைந்துள்ள மழை மாதா தேவாலயத்தில் 56 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இன்று 3 நாள் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூவினால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் அதிதூதர் புனித நிக்கோஸ் , புனித அந்தோணியர், புனித தோழமையர் , புனித சூசையப்பர் , மற்றும் புனித மழை மலை மாதா ஆகிய 5 திருத் தேர்கள் அச்சிறுப்பாக்கம் முக்கிய வீதிகளில்வளம் வந்து தேவாலயம் வந்து அடைந்தது அதன் பிறகு செங்கல்பட்டு மறை மாவட்ட மேதகு அவர்களுடைய திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ் விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி கர்நாடகா ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பிரார்த்தனை செய்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி