புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை

71பார்த்தது
படூர் ஊராட்சியில் புதிதாக போடப்பட்ட சாலைகள் மற்றும் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சி அங்காளம்மன் கோயில் தெரு, நடேசன் தெரு ஆகிய பகுதிகளில் புதியதாக போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை திறப்பு விழா மற்றும் வள்ளலார் தெரு, இந்திராகாந்தி தெரு ஆகிய பகுதிகளில் புதியதாக போடப்பட உள்ள சிமெண்ட் சாலைக்கான பூமி பூஜை போடும் விழா இன்று ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் கலந்து கொண்டு புதிய சாலைகளை திறந்து வைத்து புதியதாக போடப்பட உள்ள சாலைகளுக்கு பூமி பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கே ஏ எஸ் சுதாகர், படூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். வனிதா சேட்டு
ஒன்றிய கவுன்சிலர் நந்தினி பஞ்சா,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேகர்,
வார்டு உறுப்பினர்கள் முஹம்மதுகபீர்கான் , உமாமகேஸ்வரிரமேஷ் , ரேகாசேகர் , கெளதம் , மோகன், மலர்செல்வம் , ஜெயந்திதசரதன் , சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி