தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பே கடந்த மூன்று மாத காலமாகவே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் துவக்கி வாக்காளர் சேர்த்தல் நீக்கல் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம்களை தமிழக முழுவதும் நான்கு கட்டங்களாக நடத்தியது.
அதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்கள் வெளியிடப்பட்டு அது குறித்தும் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 8 லட்சத்து 53 ஆயிரத்து 456 ஆண் வாக்காளர்களும் , 8 லட்சத்து 95 ஆயிரத்து 107 பெண் வாக்காளர்களும் , 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 17, 48, 866 வாக்காளர்கள் இறுதியாக உள்ளனர்.