மணல் கடத்திய இரண்டு பேர் கைது

59பார்த்தது
செங்கல்பட்டு அருகே மணல் கடத்திய இரண்டு பேர் கைது.

செங்கல்பட்டு மாவட்டம் விள்ளியம்பாக்கம் பகுதியில் பாலாற்று படுக்கையில் ஆற்று மணல் கடத்துவதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது

தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் புகழேந்தி தலைமையில் போலீசார் வில்லியம்பாக்கம் பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்

அப்போது எதிரே வந்த வாகனத்தை மடக்கி பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள் அப்போது சோதனை செய்ததில் லாரியில் மண் இருந்தது தெரியவந்தது

இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் வில்லியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி