கொத்திமங்கலம் ஊராட்சியில் ரூ. 97 லட்சம் நலத்திட்ட உதவி

69பார்த்தது
கொத்திமங்கலம் ஊராட்சியில் ரூ. 97 லட்சம் நலத்திட்ட உதவி
திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் ஊராட்சிப் பகுதியில், நேற்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. இதில், கலெக்டர் ராகுல்நாத், 193 பயனாளிகளுக்கு, 97 லட்சம் ரூபாய் மதிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதன் பின், 114 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, ஆறு பேருக்கு கறவை மாடு கடன், நான்கு பேருக்கு பயிர் கடன், ஒருவருக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கப்பட்டது.

மேலும், ஐந்து பேருக்கு விலையில்லா தையல் இயந்திரம், 25 பேருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல வாரிய அட்டைகள் பெற்றனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சார்பு ஆட்சியர் நாராயணசாமி, ஒன்றியக்குழு தலைவர் அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி