உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையன்குளம் கிராமத்தில் ராஜாமணி (72) என்ற பெண்ணின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.