மாவட்ட அளவில் சாதனை படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு

61பார்த்தது
மாவட்ட அளவில் சாதனை படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு
சங்கராபுரம் அடுத்த எஸ். வி. பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி புவனேஸ்வரி. இவர் தமிழ்நாடு நாள் குறித்து மாவட்ட அளவில் நடந்த கட்டுரை போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றார். இதற்காக இவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் ரூ. 7, 000 க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட அளவில் சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி புவனேஸ்வரியை எஸ். வி. பாளையம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை முல்லைமணி, பி. டி. எ. , தலைவர் அண்ணா அறிவுமணி, ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

தொடர்புடைய செய்தி