சங்கராபுரத்தில் 1. 52 லட்சம் பறிமுதல்

60பார்த்தது
சங்கராபுரத்தில் 1. 52 லட்சம் பறிமுதல்
சங்கராபுரம் அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த நபரிடமிருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் கமிஷன் பறக்கும் படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த எஸ். கொளத்துார் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நிலையான கண்காணிப்பு குழு விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு அதே ஊரைச்சேர்ந்த சுந்தரம் மகன் பாலாஜி, 47; என்பவர், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்துவந்தார்.

அவரிடமிருந்து ரூ. 2, 200 பணம் மற்றும் அவர் வீட்டில் வைத்திருந்த ரூ. 1. 52 லட்சத்தை பறிமுதல் செய்து, சங்கராபுரம் தாசில்தார் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் திருமலை, தேர்தல் உதவியாளர் தனசேகர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி