ரிஷிவந்தியம்: உண்டியல் உடைத்து பணம் திருட்டு

78பார்த்தது
ரிஷிவந்தியம்: உண்டியல் உடைத்து பணம் திருட்டு
பகண்டைகூட்ரோடு அருகே பெரிய பகண்டையில் இருந்து மையனூர் செல்லும் சாலையில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு முகத்தில் துணி கட்டிக்கொண்டு, இரு இளைஞர்கள் இரும்பு கம்பியால் கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். 

தொடர்ந்து, உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் திருட்டு சம்பவம் நடந்தது. அதேபோல, பெரியபகண்டை ஏரிக்கரையில் உள்ள முருகன் கோவிலில் உண்டியல் குடம் திருடப்பட்டது. இதுகுறித்து பகண்டைகூட்ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி