நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

67பார்த்தது
மணலூர்பேட்டை அருகே நில பிரச்சினை தொடர்பான மோதலில் ஒருவரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணலூர்பேட்டை அடுத்த பள்ளிச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 60; அதே பகுதியைச் சேர்ந்தவர் காசி மகன் ராஜதுரை, 32; இருவருக்கும் இடையே நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. வெங்கடேசன் கடந்த 10 ம் தேதி தனது நிலத்தை ஜே. சி. பி. , மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அங்கு வந்த ராஜதுரை அவரது தாய் அமுதா, உறவினர்களான கண்ணன் மகன் ஆசைக்கண்ணு, 27; லலிதா, 52; ஆகியோர் வெங்கடேசனை திட்டித் தாக்கினர்.

இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி