பிரதோஷ வழிபாடு பக்தர்கள் பங்கேற்பு

55பார்த்தது
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சியில் உள்ள சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நந்தி பெருமானுக்கு பால், தேன், இளநீர், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 16 வகை மங்கல திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல், கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு மற்றும் நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், தண்டலை சுயம்புநாதேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர், பல்லகச்சேரி ராமநாதீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி