தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எதிர்வரும் 15 ஆம் தேதி முதல் விரிவுபடுத்தி தொடங்கி வைக்க உள்ளதை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலை ஊராட்சி அல் ரகுமான் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட முன்னேற்பாடு பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம். எஸ் பிரசாந்த் இன்று ஆய்வு செய்தார்.