சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு நாள்கணக்கில் சம்பளம் தரப்பட்டது. படப்பிடிப்பின் கடைசி நாளில் சம்பளத்தை வாங்கிச் சென்ற அவர், இரவே படக்குழுவினருக்கு போன் செய்து, 3 மணி நேரம் நடித்த நான் ஒருநாள் சம்பளத்தை பெற்றது தவறு, மீதிப்பணத்தை வாங்கிகொள்ளுங்கள் என கூறி திருப்பி கொடுத்திருக்கிறார். இன்றைய திரையுலகில் இப்படி ஒரு மனிதரா என்று படக்குழுவை அது ஆச்சரியப்படுத்தியது.