ஜிப்மர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை இயங்காது!

83பார்த்தது
ஜிப்மர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை இயங்காது!
புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமின்றி, தமிழ்நாட்டின் கடலூர், மயிலாடுதுறை, நாகை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவு வழக்கம்போல் இயங்கும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி