3 மாவட்டங்களுக்கு ரெட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

67பார்த்தது
3 மாவட்டங்களுக்கு ரெட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
கேரள மாநிலத்தில் இன்று(ஜூன் 23) கனமழை தொடர்ந்து வருவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டிலும் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி