ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மீனவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மீனவ கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் விரைந்து தலையிட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.